அவர், “ஒரு நடிகராக மக்கள் மத்தியில் அங்கீகாரம் பெற்றிருந்தாலும், எனது சொந்த ஊரில் இன்னும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்குக் கோயிலுக்குள் நுழைய அனுமதி இல்லை.
நாங்கள் இப்போதும் கோயில்களுக்கு வெளியே நின்றுதான் கடவுளை வணங்குகிறோம். உள்ளே நுழைய எங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இது எனக்கு மிகுந்த மனவேதனையைத் தருகிறது.
கோயில்கள் மட்டுமல்லாது, சலூன் கடைகளிலும் எங்களுக்கு பாகுபாடு காட்டப்படுகிறது.
எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்குத் தலைமுடி வெட்ட அங்குள்ளவர்கள் மறுக்கிறார்கள். இதற்காக நாங்கள் பல மைல் தூரம் பயணித்து வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டியுள்ளது.

திரைப்படங்களில் நாம் ஒரு கதாபாத்திரமாகக் கொண்டாடப்படலாம், ஆனால் நிஜத்தில் என் சாதிதான் பலரின் கண்களுக்குத் தெரிகிறது.
கல்வி மற்றும் தொழில்நுட்பத்தில் நாடு முன்னேறிவிட்டதாகச் சொன்னாலும், கிராமப்புறங்களில் இன்னும் இத்தகைய பிற்போக்குத்தனமான சாதியக் கட்டமைப்புகள் வலுவாக உள்ளன.
இந்த வேதனை எப்போது மாறும் என்று தெரியவில்லை” எனப் பேட்டியில் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் வினோத் சூர்யவன்ஷி.