திமுக, காங்கிரஸ் இரு கட்சியும் கடந்த சுமார் 20 ஆண்டுகளாகக் கூட்டணியில் இருந்து வந்தது. நகர்புற மற்றும் ஊரக உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட பல தேர்தல்களில் கூட்டணியாகப் போட்டியிட்டனர்.
அதன்படி கும்பகோணம் மாநகராட்சியில் கவுன்சிலர்களுக்கான தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்டதில் இரு காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் மட்டும் வெற்றி பெற்றனர். இதில் ஆட்டோ டிரைவராக இருந்த சரவணனும் ஒருவர்.

கூட்டணி தர்மப்படி கும்பகோணம் மேயர் பதவி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட சரவணன் மேயர் ஆனார். தற்போது துணை மேயராக இருக்கும் தமிழழகன் மேயர் ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இது நிகழ்ந்தது. அந்தச் சமயத்தில் இந்த விவவாகரம் பேசு பொருளாகவும் அமைந்தது.
இந்நிலையில் சில காரணங்களால் மாமன்ற கூட்டங்களில் தி.மு.க கவுன்சிலர்களுக்கும் மேயர் சரவணனுக்கும் இடையே வாக்கு வாதம் மற்றும் மோதல்கள் ஏற்பட்டுள்ளது.
மாமன்ற கூட்டத்தில் திமுக கவுன்சிலர் தன்னைத் தாக்கி விட்டதாக மேயர் சரவணன் நெஞ்சு வலிப்பதாகக் கூறி தரையில் உருண்டு புரண்டதும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவங்கள் நடந்தன.