கும்பகோணம்: காரில் ஆயுதங்கள் வைத்திருந்த விவகாரம்; பாஜக நிர்வாகியைக் கைதுசெய்த போலீஸ்!

Spread the love

கும்பகோணம், சத்யம் நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் வேதா என்கிற வேதச்செல்வம் (52). இவர் பாஜக-வில் தஞ்சாவூர் வடக்கு மாவட்டப் பொதுச் செயலாளராக இருக்கிறார். இந்நிலையில், திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் நேற்று நடைபெற்ற பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் பிறந்தநாள் விழாவிற்கு சென்று விட்டு, மீண்டும் இரவு வேதச்செல்வம் காரில், கும்பகோணம் திரும்பியுள்ளார்.

அப்போது, கும்பகோணம் நகர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸார், வேதச்செல்வம் காரை மறித்து சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். அப்போது, காரில் ஆயுதங்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது. இது குறித்து கும்பகோணம் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீஸார் வேதச்செல்வத்திடம் விசாரணை நடத்தினர். மேலும் ஆயுதங்கள் மற்றும் காரை பறிமுதல் செய்ததாக சொல்லப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *