கேரளம்: திருடனுக்குப் பயந்து புத்தகத்தில் மறைத்து வைக்கப்பட்ட நகை; தெரியாமல் எடைக்குப் போட்ட கணவன்! | Kerala: Husband unknowingly sells jewelry hidden in book due to fear of thief

Spread the love

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் தேவலக்கரை பகுதியைச் சேர்ந்தவர் உம்மர் குட்டி. இவர்கள் வசித்து வந்த பகுதியில் உள்ள வீடுகளில் அவ்வப்போது திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்று வந்தன.

எனவே, தனது வீட்டில் உள்ள நகைகள் திருடர்களிடம் சிக்காமல் மறைத்து வைக்க உம்மர் குட்டியின் மனைவி ஒரு ஐடியா செய்தார். அதன்படி, 6 சவரன் நகைகளை ஒரு டப்பாவில் போட்டு, அதைத் தனது வீட்டில் இருந்த பழைய பாடப்புத்தகங்களுக்கு இடையே மறைத்து வைத்திருந்தார்.

இதற்கிடையே, நகை வைக்கப்பட்ட டப்பா இருப்பது தெரியாமல் கடந்த ஏப்ரல் 21-ம் தேதி வீட்டில் இருந்த பழைய பேப்பர் மற்றும் புத்தகங்களை உம்மர் குட்டி பழைய இரும்புக்கடையில் விற்றுவிட்டார்.

மூன்று நாட்களுக்குப் பிறகு ஏப்ரல் 23 அன்று உம்மர் குட்டியின் மனைவி நகையைத் தேடியபோதுதான், அது பழைய இரும்பு கடைக்குச் சென்றது தெரியவந்தது. உடனடியாக பழைய இரும்பு கடைக்குச் சென்று விசாரித்தனர். உம்மர் குட்டி விற்ற பேப்பர் கட்டுகளை ஏற்கனவே குவித்து வைத்த மூட்டைகளில் போட்டுவிட்டதால், நகை டப்பா எங்கு உள்ளது என்பதை உடனடியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து உம்மர் குட்டியின் குடும்பத்தினரும், அங்கிருந்த தொழிலாளர்களும் குவித்து வைக்கப்பட்டிருந்த பழைய பொருட்களுக்கு இடையே தீவிரமாகத் தேடினர்.

நகையை தேடும் பணியில் ஊழியர்கள்

நகையை தேடும் பணியில் ஊழியர்கள்

முதல் நாள் தேடுதலில் புத்தகத்திலிருந்து வெளியே விழுந்திருந்த கம்மல், வளையல் மற்றும் மோதிரம் ஆகியவை கிடைத்தன. அடுத்த நாள் நடத்திய தேடலில், புத்தகத்திற்குள்ளேயே இருந்த மாலையையும் பழைய இரும்பு கடை தொழிலாளர்கள் கண்டுபிடித்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *