அப்போது, அமைச்சர் நேருவின் பெயரைத் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டு வழக்குப்பதிவு செய்யும்படி தாங்கள் உத்தரவிடவில்லை என்றும், அந்த முறைகேடு தொடர்பாக மட்டுமே வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டதாகவும் நீதிபதிகள் விளக்கம் அளித்தனர்.

மேலும், இந்த விவகாரத்தில் விரிவான வாதங்கள் தேவைப்படுவதால், அதிமுக தரப்பில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மற்றும் அரசின் மறுஆய்வு மனுக்கள் ஆகிய அனைத்தையும் ஜூன் 4-வது வாரத்திற்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.