3 நாள் டெல்லி பயணைத்தை முடித்துவிட்டு தமிழக முதல்-அமைச்சர் விஜய் கர்நாடக மாநிலம் மங்களூரு சென்றார். அடெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் முதலமைச்சர் விஜய் இன்று மதியம் கர்நாடக மாநிலம் மங்களூர் புறப்பட்டார். மங்களூர் விமான நிலையத்தில் வந்திறங்கிய அவர், அங்கிருந்து 140 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு காரில் சென்றார். அங்கு அவர் சாமி தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.
கோவிலுக்குள் செல்லும்போது முதலமைச்சர் விஜய் மேல்சட்டை அணியவில்லை. அவரது பாதுகாவலரும் மேல்சட்டை அணியாமல் கோவிலுக்குள் சென்றார். இதன் பின்னர் சாமி தரிசனம் செய்த முதலமைச்சர் விஜய், கோவில் பிரகாரத்தை சுற்றி வலம் வந்தார். முன்னதாக கோவிலுக்கு 2.5 அடி நீள வாளை காணிக்கையாக முதலமைச்சர் விஜய் அளித்திருந்தார்.
முதல்-அமைச்சர் விஜய்யின் வருகையையொட்டி, கொல்லூர் மூகாம்பிகை கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதையடுத்து, தடுப்புகள் அமைக்கப்பட்டு கோவில் வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. உடுப்பியில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
கர்நாடகம் மட்டுமின்றி தமிழகம், கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்களும் இந்த கோவிலுக்கு சென்று வழிபடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் இந்த கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தி உள்ளது குறிப்பிடதக்கது.

