கோவை, மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டம்; மீண்டும் நிராகரித்த மத்திய அரசு|central government again rejects coimbatore madurai metro rail projects

Spread the love

இதையடுத்து, கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கியது. அதன்படி, மதுரையில் ரூ.11,360 கோடியிலும், கோவையில் ரூ.10,740 கோடியிலும் மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கையை மாநில அரசு வாயிலாக, மத்திய அரசிடம் வழங்கப்பட்டது.

ஆனால், 20 லட்சம் மக்கள்தொகை தேவை என்றும், கோவை மற்றும் மதுரையில் 15 லட்சம் மக்கள்தொகை மட்டுமே இருப்பதால் அனுமதி அளிக்க முடியாது எனக் கூறி, திட்ட அறிக்கைகளை மத்திய அரசு திருப்பி அனுப்பியது.

மத்திய அரசு

மத்திய அரசு

இதனைத் தொடர்ந்து மெட்ரோ திட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசு கடந்த மே மாதம் மீண்டும் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து திட்ட அறிக்கையை அனுப்பியது.

ஆனால் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்தும் அளவுக்கு மக்கள்தொகை இல்லை என்றும் மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் அமைவதால் பயண நேரம் குறைய வாய்ப்பில்லை என்று கூறி, இரண்டாவது முறையாக மத்திய அரசு கோவை, மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை மீண்டும் நிராகரித்திருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *