சச்சின் சாதனை க்ளோஸ்.. 15 வயதில் தொடர் நாயகன் விருது.. சாதனைக்கு மேல் சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி! | Vaibhav Sooryavanshi: Vaibhav Sooryavanshi becomes the youngest Indian cricketer to get the POTM Award

Spread the love

Cricket

oi-Yogeshwaran Moorthi

ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்ற நிலையில், ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை கைப்பற்றி வைபவ் சூர்யவன்ஷி புதிய வரலாறு படைத்துள்ளார். சிறிய வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் இரு விருதுகளையும் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்திருக்கிறார்.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 192 ரன்களை எடுத்தது. சிறப்பாக ஆடிய வைபவ் சூர்யவன்ஷி 49 பந்துகளில் 81 ரன்களை எடுத்து அசத்தினார்.

Vaibhav Sooryavanshi

இதன்பின் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இந்திய அணி சார்பாக மயங்க் யாதவ் 4 ஓவர்களில் 29 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார். இதன் மூலமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்திய டி20 அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் பொறுப்பேற்ற பின் முதல்முறையாக தொடரை வென்றுள்ளார். அதனால் ஸ்ரேயாஸ் ஐயருக்கு இது எமோஷனல் மொமண்ட்டாக அமைந்தது. அதேபோல் இந்தப் போட்டியின் ஆட்டநாயகன் விருதை வைபவ் சூர்யவன்ஷி கைப்பற்றினார். அதுமட்டுமல்லாமல் 3 இன்னிங்ஸில் வைபவ் சூர்யவன்ஷி 2 அரைசதங்கள் உட்பட 151 ரன்களை விளாசி இருக்கிறார்.

இதனால் தொடர் நாயகன் விருதையும் வைபவ் சூர்யவன்ஷி கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். இதன் மூலமாக மிக இளம் வயதில் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை வென்ற வீரர் என்ற வரலாற்றை வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார். இதனால் வரும் நாட்களில் வைபவ் சூர்யவன்ஷி அடிக்கும் ஒவ்வொரு ரன்னும் சாதனையாகவே இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *