Cricket
oi-Yogeshwaran Moorthi
மும்பை: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் இருந்து நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டுள்ளார். சஞ்சு சாம்சனின் நீக்கப்பட்டதற்கு அவரின் ஃபார்ம் ஒரு காரணம் என்று சொல்லப்பட்டாலும், அவருக்கு சிறிய ஓய்வு கொடுக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாகவே பிரப்சிம்ரன் சிங் அந்த இடத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளார். இவரின் தேர்வுக்கு பின் ஐபிஎல் தொடர் ஒரு முக்கிய பங்காற்றி இருக்கிறது.
டி20 உலகக்கோப்பை தொடரில் தொடர்ச்சியாக 3 அரைசதங்கள் அடித்து இந்திய அணிக்கு உலகக்கோப்பையை வென்று கொடுத்தவர் சஞ்சு சாம்சன். இதன்பின் இந்திய அணிக்காக ஆடிய 3 போட்டிகளில் சஞ்சு சாம்சனால் ரன்கள் சேர்க்க முடியவில்லை. இதனால் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இருந்து சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டார்.

அவரது இடத்தில் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனால் பயிற்சியாளர் கவுதம் கம்பீரிடம் நேரடியாகவே தனது அதிருப்தியை சஞ்சு சாம்சன் வெளிப்படுத்தினார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் டிரெண்டாகியது. இந்த நிலையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் இருந்து சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டுள்ளார்.
இஷான் கிஷன் முதன்மை விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டு, பிரப்சிம்ரன் சிங் பேக் அப் விக்கெட் கீப்பராக கொண்டு வரப்பட்டுள்ளார். பிரப்சிம்ரன் சிங்கை விடவும் சஞ்சு சாம்சனின் திறமை வேறு லெவலில் இருக்கிறது. ஆனாலும் பிரப்சிம்ரன் சிங்கின் உழைப்புக்கு இந்திய அணியில் ஒரு தொடரிலாவது விளையாட வைக்கப்பட வேண்டும்.
இந்திய ஏ அணிக்காக நீண்ட ஆண்டுகளாக விளையாடி வருகிறார். அதேபோல் பிரப்சிம்ர சிங்கை இந்திய அணிக்கு அறிமுகம் செய்வதற்கு பின்னணியில் ஐபிஎல் தொடரிலும் ஒரு காரணமாக உள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஏராளமான இளம் வீரர்கள் இந்திய அணிக்கு அறிமுகம் ஆகாமல் இருக்கின்றனர். இவர்களை இந்திய அணிக்குள் கொண்டு வருவதன் மூலமாக, அவரின் மார்க்கெட் ரேட் உயரும்.
ஒவ்வொரு அணி நிர்வாகமும் அவர்களை வாங்க கூடுதல் தொகையை செலவு செய்ய வேண்டிய தேவை எழும். இதனால் சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டுள்ளார் என்பதை விடவும், அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாகவே பார்க்கப்படுகிறது. விரைவில் இதுதொடர்பாக பிசிசிஐ தேர்வுக் குழு விளக்கம் அளிக்கும் என்றும் பார்க்கப்படுகிறது.