”சட்டமன்றத்திற்கு ஆப்சென்ட்” தவெக அரசுக்கு பணிந்தாரா திமுக முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்!- Reason behind dmk ex minister s.s.sivasankar absent

Spread the love

திமுக-வின் முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர். இவர் தற்போது குன்னம் தொகுதி எம்.எல்.ஏ-வாகவும், அரியலூர் மாவட்ட செயலாளராகவும் இருக்கிறார். நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரில் சில தினங்கள் மட்டுமே கலந்து கொண்ட சிவசங்கர் அதன் பிறகு கூட்டங்களில் பங்கேற்காதது அரசியல் வட்டத்தில் பேசு பொருளாகியிருக்கிறது.

போக்குவரத்து துறையில் வேலைவாங்கி தருவதாக எழுந்த மோசடி புகாரில் விசாரணைக்காக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சிவசங்கருக்கு சம்மன் அனுப்பியது. இதைத்தொடர்ந்து அவரும் விசாராணைக்கு ஆஜராகி விளக்கமளித்தார்.

ஸ்டாலின் உடன் சிவசங்கர்

ஸ்டாலின் உடன் சிவசங்கர்

இந்நிலையில், ஆளும் தவெக அரசின் நடவடிக்கைக்கு பயந்து சிவசங்கர் சட்டமன்றத் கூட்டத்தொடரில் பங்கேற்பதை தவிர்த்து ’சைலண்ட்’ ஆகிவிட்டதாக தகவல் பரவியது. இதை மறுத்த சிவசங்கர் ஆதரவாளர்கள், திமுக தலைவர் ஸ்டாலினின் குட்புக்கில் இருக்கும் அண்ணன் சிவசங்கர் திமுக-வில் அடுத்த கட்டத்துக்கு செல்ல இருக்கிறார். இதை பொறுக்க முடியாத சில திமுக புள்ளிகளால் சிவசங்கர் தவெக அரசுக்கு பயந்து அமைதியாகி விட்டதாக கிளப்பி விடுவதாக கூறுகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *