IUML: “கோடி கோடியாய் கொண்டு வந்து கொடுத்தார்கள்” – எம்.எல்.ஏ பேச்சும் – பொதுச் செயலாளர் விளக்கமும்! | The allegation made by the IUML MLA regarding horse-trading became a topic of discussion.

Spread the love

இந்த நிலையில், ஐ.யூ.எம்.எல் எம்.எல்.ஏ சையத் பாரூக் பாஷா பேச்சுக்கு விளக்கமளிக்கும் வகையில், ஐ.யூ.எம்.எல் பொதுச் செயலாளர் கே. ஏ. எம். முஹம்மது அபூபக்கர், “தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டில் நிலையான ஆட்சி அமைப்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, பல்வேறு கட்சிகளும் ஆட்சி அமைக்க முயன்றதால் மட்டுமே குதிரை பேரம் நடந்ததாக வாணியம்பாடி தொகுதி எம்.எல்.ஏ குறிப்பிட்டார். அவர் எந்தக் குறிப்பிட்ட கட்சியையும் சுட்டிக்காட்டவில்லை.

முஸ்லிம் லீக் சார்பில் வெற்றி பெற்ற இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் மக்கள் நலனுக்காகவும், சமுதாயப் பிரச்சனைகளுக்காகவும் தொடர்ந்து சிறப்பான பணிகளை ஆற்றி வருகின்றனர்.

கே. ஏ. எம். முஹம்மது அபூபக்கர்

கே. ஏ. எம். முஹம்மது அபூபக்கர்

ஆனால், எதிரணியில் இருப்பவர்கள் அவ்வப்போது தவறான தகவல்களைப் பரப்பி பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த முயல்கின்றனர். தற்போது புதிதாக ஆட்சி அமைந்துள்ள நிலையில், அரசினுடைய நல்ல திட்டங்களைப் பாராட்டுவதும், குறைகள் இருந்தால் அதை ஆரோக்கியமாகவும் கண்ணியமாகவும் சுட்டிக்காட்டுவதுமே ஒரு நல்ல எதிர்க்கட்சிக்கு அழகாகும். அதை விடுத்து தரம் தாழ்ந்த விமர்சனங்களைச் செய்வதன் மூலம் எதையும் சாதித்துவிட முடியாது. தேசிய அளவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இப்போதும் “இந்தியா’ கூட்டணியிலேயே தொடர்ந்து நீடிக்கிறது.” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *