தி.மு.க கட்சி ஆட்சியின்போது, பைசா துறைக்கு அமைச்சராக இருந்த கோல்டு பிரமுகர், சொந்த மாவட்ட அ.தி.மு.க மாஜியை சமீபத்தில் போனில் அழைத்து பிறந்தநாள் வாழ்த்து கூறினாராம். ‘தி.மு.க-வுக்கு மாஜியை வரவேற்கவே சிக்னல் காட்டியிருக்கிறார் கோல்டு பிரமுகர்’ என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். அதாவது, ‘மறுசீரமைப்புக்கு பின் மாவட்டத்திலிருக்கும் தி.மு.க சீனியருக்கு ஓய்வு கிடைக்கப் போகிறது.
அவரிடத்தை நிரப்புவதற்கு அ.தி.மு.க மாஜியை தி.மு.க-வுக்குள் இழுத்துவர திட்டமிடுகிறார் கோல்டு பிரமுகர். அதன் எதிரொலியாகத்தான், ‘ஸ்டாலின் கோபப்பட்டால் த.வெ.க ஆட்சியே அழிந்துவிடும்’ என்று பேசியிருக்கிறார் அ.தி.மு.க மாஜி… ‘ என்கிறார்கள் விவரப்புள்ளிகள். இதனிடையே, ‘சி.வி சண்முகம், எஸ்.பி வேலுமணி போன்றவர்கள் போய்விட்டால், எடப்பாடிக்கு நெருக்கமான இடத்தில் நீங்கள் இருக்கலாம்.. அவசரப்படாதீர்கள்’ என மாஜிக்கு அறிவுரைச் சொல்கிறார்களாம் உள்ளூர் அ.தி.மு.க புள்ளிகள்