சர்க்கரை தட்டுப்பாட்டை தடுக்க மத்திய அரசு எடுத்த 5 நடவடிக்கைகள்|Sugar Prices Soaring? Here’s Why the Government Is Acting Now

Spread the love

சர்க்கரை சப்ளையைச் சமாளிக்க என்னென்ன நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது?

1. ஆகஸ்ட் 1 முதல் நவம்பர் 30, 2026 வரை நாடு முழுவதும் உள்ள சர்க்கரை வியாபாரிகளுக்கு 400 டன் இருப்பு வரம்பு விதிக்கப்பட்டுள்ளது.

2. செப்டம்பர் 1 முதல், மொத்த நுகர்வோர்கள் (Bulk consumers) 15 நாட்களுக்குத் தேவையான பயன்பாட்டிற்கு மேல் சர்க்கரையை இருப்பாக வைக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

3. செயற்கைத் தட்டுப்பாடு மற்றும் கள்ளச்சந்தைத் தடுப்பைச் சரிபார்க்க, மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகளின் கூட்டுக் குழுக்கள் ஆலைகளில் நேரடியாகச் சென்று சர்க்கரை இருப்பை ஆய்வு செய்து வருகின்றன.

4. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உள்நாட்டுச் சர்க்கரை இருப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் 10 எல்.எம்.டி கச்சா சர்க்கரையை வரியின்றி இறக்குமதி செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

5. அக்டோபர் 15, 2026 முதல் கரும்பு அரைப்பதைத் தொடங்குமாறு மாநிலங்களுக்கும் சர்க்கரை ஆலைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அக்டோபர் மாத சர்க்கரை உற்பத்தி வழக்கமான 3-4 எல்.எம்.டி-யிலிருந்து 10 எல்.எம்.டி-க்கும் அதிகமாக உயர்ந்து, பண்டிகைக் காலத்தில் சப்ளை சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *