கொஞ்ச நாளில் தி இந்து பேப்பர்ல என் போட்டோவோட அந்த விளம்பரம் வந்தது, அது ஒரு நம்பிக்கையைத் தந்தது,
அடுத்து கொஞ்ச நாள்ல சன் மியூசிக் சேனல்ல ஆங்கரிங் பண்ண ஆடிஷன்னு கேள்விப்பட்டு அங்க போனேன். அப்ப சக்ஸேனா அங்க முக்கிய பொறுப்புல இருந்தார். வந்திருந்த கூட்டத்தைப் பார்த்து மிரண்டு போய் நின்னவன் அவர் கண்ணுல பட்டுட்டேன்.
என்னைப் பார்த்து என்ன தோணுச்சோ நேரா உள்ள கூப்பிட்டுப் போய் ஆடிஷன் அட்டெண்ட் பண்ண வச்சார். அடுத்த சில தினங்களிலேயே வந்து சேரச் சொல்லிட்டாங்க. இதெல்லாம், பார்க்குறப்ப நமக்கே ஒரு கான்ஃபிடெண்ட் வருமில்லையா, அப்படிதான் ஸ்கிரீன் பக்கம் வந்தேன், .
பிறகு சேனல்ல என் நிகழ்ச்சிகளுக்குக் கிடைச்ச வரவேற்பு வேற லெவல் என்னுடைய ஷோ மூலம்தான் சாண்ட்ராவே எனக்கு கிடைச்சாங்க. ஆங்கரா இருந்த நாள்களை என் வாழ்வின் வசந்த காலம்னு சொல்வேன்.
சினிமா தேடலில் முழுமையாக இறங்கலையா? அல்லது டிவியிலயே இருந்திருந்தா அங்கயாவது நிரந்தரமான இடம் கிடைச்சிருக்கும். சீரியலா சினிமாவாங்கிற குழப்பம் இருந்ததா?
ஆங்கரா இருந்தப்ப தான் விஜய் டிவி சீரியல்ல நடிக்க கூப்பிட்டாங்க. அங்க நடிச்ச சீரியல்லாம் ஹிட்தான். முதல் சீரியலை டைரக்ட் செய்தது சமுத்திரக்கனி சார். சீரியல்ல பார்த்துட்டுதான் சசி சார் ‘டிஷ்யூம் டிஷ்யூம்’ படத்துல சின்ன ரோல் தந்தார். அதுதான் என் முதல் படம். சீரியலா சினிமாவாங்கிற குழப்பம் இல்ல. ஆனா ஹீரோவா நான் நடித்த முதல் ரெண்டு படங்கள் சரியா போகலை.