சீர்காழி: த.வெ.க கொடி கலருக்கு மாறிய போலீஸ் நிழற்குடை – எதிர்ப்பு கிளம்பியதால் அகற்றம்!

Spread the love

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே போலீஸ் நிழற்குடை இருந்தது. போக்குவரத்தை ஒழுங்கு செய்யும் டிராபிக் போலீஸார் பயன்படுத்துவதற்காக இந்த நிழற்குடை அமைக்கப்பட்டது. நிழற்குடையில் இருந்தபடி போலீஸார் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் ஒழுங்கு செய்யும் பணியினை மேற்கொள்வார்கள். அந்த நிழற்குடையை புதுப்பிக்கும் பணி நடைபெற்றது. நகைக்கடை உரிமையாளர் ஒருவர் இதை புதுப்பிப்பதற்கான ஸ்பான்சர் செய்ததுடன் நகை கடை பெயரையும் நிழற்குடையில் எழுதி விளம்பரம் செய்யப்பட்டது.

தவெக கலருக்கு மாறிய போலீஸ் நிழற்குடை

தவெக கலருக்கு மாறிய போலீஸ் நிழற்குடை

காவல் நிலையம், காவல் நிழற்குடை உள்ளிட்டவற்றுக்கு வழக்கமான கலர் ஒன்று பயன்படுத்தப்படுகிறது. ஆனால் சீர்காழியில் நிழற்குடைக்கு தவெக கட்சியின் நிறத்தில் பெயின்ட் அடிக்கப்பட்டது. இதைப் பார்த்த சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும் போலீஸ் நிழற்குடைக்கு ஆளுங்கட்சியான தவெக கட்சிக் கொடியின் நிறத்தில் பெயின்ட் அடிக்கப்பட்டது குறித்து விமர்சனம் செய்தனர். முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இது குறித்து விமர்சித்து பதிவிட சர்ச்சையானது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *