செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கி பயிற்சி மையம் அமைந்துள்ள அனுமந்தபுரம் மலைப்பகுதிக்கு அனுமதியின்றி கல்லூரி மாணவர்கள் 6 பேர் டிரக்கிங் சென்றிருக்கின்றனர்.
அங்கிருந்த ராக்கெட் லாஞ்சரை எமன்சு யாதவ் (21) என்ற மாணவர் காலால் உதைக்கும்போது, அது கல்லில் மோதி வெடிக்க பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே அவர் உயிரிழந்திருக்கிறார்.

மேலும் அவருடன் சென்ற மூன்று மாணவர்கள் படுகாயமடைந்திருக்கின்றனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.