
கோவையில் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் நான் வெற்றி பெறுவேன். சுயேட்சை வேட்பாளர்கள் 18 பேர் என்ன?, கரூரில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்தாலும் எனக்கு பயம் இல்லை. கோவை மாவட்ட திமுக சகோதரர்களை நினைத்தால் பரிதாபமாக உள்ளது. சுயேட்சை வேட்பாளராக நிற்க வைப்பதற்கு கூட, அவர் உங்களை நம்பவில்லை. அதற்கு கூட கரூரில் இருந்து இறக்குமதி செய்கிறார்கள்.
செந்தில் பாலாஜி வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தாலும் மக்கள் அவரை வெற்றி பெற விட மாட்டார்கள். பணநாயகம் என்றும் வென்றதாக சரித்திரம் இல்லை. நான் மதுரையில் இருந்து 17 வயதில் கோவைக்கு வந்த போது, செந்தில் பாலாஜி பிறக்க கூட இல்லை. கோவை மக்களை ஏமாற்ற வேண்டும் என செந்தில் பாலாஜி இங்கு வந்துள்ளார். ஆனால், கோவை மக்கள் அதிக அறிவு படைத்தவர்கள், அமைதியானவர்கள். இங்கு அமைதி, வளம், வளர்ச்சியை தான் எதிர்பார்ப்பார்கள். எனவே செந்தில் பாலாஜி தான் ஏமாறுவார். அவரின் டோக்கன் இங்கு விலை போகாது. சட்டவிரோதமாக பட்டி அமைத்தும், டோக்கனை கொடுத்து மக்களை ஏமாற்றும் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.