செந்தில் பாலாஜி பூர்வீக வீட்டில் அவரது தம்பிக்கு சம்மன் வழங்கிய போலீஸார்! – கரூர் பரபரப்பு – karur crime!

Spread the love

அப்போது, அங்கு இருந்த தி.மு.க. வழக்கறிஞர்கள் போலீஸாரிடம் வருகைக்கான காரணம் குறித்து கேள்வி எழுப்பினர். சம்மன் வழங்க வந்திருப்பதாக போலீஸார் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர்கள் வீட்டிற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அதன்பிறகு, வீட்டிற்குள் சென்ற போலீஸார் செந்தில் பாலாஜியின் பெற்றோர்களான வேலுச்சாமி மற்றும் அவரது மனைவியிடம் சம்மனை வாசித்துக் காட்டி, செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமார் ஆகியோர் வரும் திங்கட்கிழமை காலை சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என தெரிவித்தனர்.

இதையடுத்து, சம்மனை பெற்றுக் கொண்ட பெற்றோர் அதில் கையெழுத்திட்டு போலீஸாரிடம் ஒப்படைத்தனர். செந்தில் பாலாஜியின் சகோதரருக்கு சம்மன் வழங்கப்பட்ட சம்பவத்தால் கரூர் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *