நோயாளிகளுக்கு உயர்தர மற்றும் மேம்பட்ட இரத்த நாள சிகிச்சைகளை வழங்கும் நோக்கில், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் “சிரை நாள பாதிப்புகளுக்கான பிரத்யேக மையம்’ தொடங்கப்பட்டுள்ளது. நோயாளிகளின் நலனை முன்னிறுத்தி, அனைத்து வகையான சிரை நாள பிரச்சனைகளுக்கும் (உதாரணமாக: நரம்புச் சுருட்டல்) முழுமையான சிகிச்சையை ஒரே இடத்தில் வழங்குவதே இம்மையத்தின் நோக்கமாகும்.
புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள இம்மையம், இரத்த நாள அறுவைசிகிச்சை, கதிரியக்கவியல், தோல் மருத்துவம் மற்றும் காயங்களுக்கான சிகிச்சை ஆகிய அனைத்துப் பிரிவுகளையும் ஒரே கூரையின் கீழ் ஒருங்கிணைத்துள்ளது. இதன் மூலம் நோயாளிகள் பரிசோதனைகள், சிகிச்சை மற்றும் தொடர் கண்காணிப்பு ஆகியவற்றை அலைச்சலின்றி எளிதாகப் பெற முடியும். ஒரே நாளில் மருத்துவ ஆலோசனை, விரைவான பரிசோதனை முடிவுகள் மற்றும் மருத்துவமனையில் தங்க வேண்டிய தேவையில்லாத எளிய சிகிச்சைகளை வழங்குவதில் இம்மையம் தனி கவனம் செலுத்துகிறது.
மேம்பட்ட ஸ்கேனிங் வசதிகள் மற்றும் நவீன சிகிச்சை தொழில்நுட்பங்களுடன் கூடிய இந்த மையம், சுருள் சிரை, ஆழமான சிரை இரத்த உறைவு (DVT), சிரை புண்கள், இரத்தக்கசிவு மற்றும் நாள்பட்ட சிரை குறைபாடு போன்ற பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்கிறது. இதன் மூலம் நோயாளிகள் மருத்துவமனையில் தங்கும் நேரம் குறைவதுடன், விரைவாக குணமடைந்து சிறந்த பலன்களைப் பெறலாம்.
இது குறித்து அப்போலோ மருத்துவமனைகளின் சென்னை மண்டல தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் இளங்குமரன் காளியமூர்த்தி கூறுகையில், “பெரும்பாலும் ஆரம்பத்திலேயே கண்டறியப்படாமலும், போதிய சிகிச்சை அளிக்கப்படாமலும் இருக்கும் சிரை நாள நோய்களுக்குச் சிகிச்சை அளிப்பதில், இந்தப் புதிய மையம் ஒரு முக்கிய மைல்கல்லாகும். பல்வேறு மருத்துவ நிபுணர்களை உள்ளடக்கிய எங்களின் ஒருங்கிணைந்த அணுகுமுறை மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் மூலம், நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் அதிக வலியற்ற எளிய சிகிச்சைகளை வழங்கி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே எமது நோக்கமாகும்,” என்றார்.
சென்னை கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனையின் ரத்த நாள அறுவை சிகிச்சை நிபுணரும், மூத்த ஆலோசகருமான டாக்டர் பாலாஜி கூறுகையில், “நரம்புச் சுருட்டல் போன்ற பல சிரை நாள குறைபாடுகள் வெறும் அழகு சார்ந்த பிரச்சனையாகவே பலரால் கருதப்படுகின்றன. ஆனால், உரிய நேரத்தில் சிகிச்சை பெறாவிட்டால், அவை நோயாளிகளின் அன்றாடச் செயல்பாடுகளையும் ஒட்டுமொத்த உடல்நலத்தையும் கடுமையாக பாதிக்கும். நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பது மிகவும் முக்கியம். இம்மையத்தின் மூலம் துல்லியமான மற்றும் அதிக வலியற்ற நவீன சிகிச்சைகளை எங்களால் வழங்க முடிகிறது. இதனால் நோயாளிகள் விரைவாகவும் முழுமையாகவும் குணமடைய முடிகிறது,” என்றார்.