வடபழனி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரியும் வேலப்பன் என்பவர், சிறுவனுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
அரசியல் தலைவர்கள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், அசோக் நகர் போலீஸார் வேலப்பனை போக்சோ வழக்கில் கைதுசெய்தனர்.

இந்நிலையில் காவலர் வேலப்பனை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டிருக்கிறார்.