இருமணம் இணையும் திருமணம் என்பது ஒவ்வொருவர் வாழ்விலும் மிகவும் முக்கியமான தருணம். காரணம் இல்லறத்தில் ஈடுபடுபவர்களே சகல அறங்களையும் செய்யத் தகுதியானவர்கள் என்கின்றன ஞான நூல்கள்.
அப்படிப்பட்ட திருமணம் சில நேரங்களில் கிரக தோஷங்களால் தள்ளிப்போகின்றன. ஜனன கால ஜாதகத்தில் இரண்டாம் இடம் ஏழாம் இடம் சரியாக அமையவில்லை என்றால் தாமதத் திருமணம், திருமண வாழ்வில் சிக்கல்கள் ஆகியன உண்டாகும் என்கிறார்கள்.
அப்படிப்பட்ட தோஷங்களை நீக்கி நல்ல வாழ்க்கைத் துணை அமைய உதவும் வழிபாடு ஒன்றை நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார். அதுதான் சுயம்வர பார்வதி ஹோமம்.
எனவேதான் சக்திவிகடன் வாசகர்களின் நலனை உத்தேசித்து சேலம் காவடி பழநியாண்டவர் ஆசிரம் ஆலயத்தில் சுயம்வர பார்வதி ஹோமம் ஒன்றைச் செய்ய உத்தேசித்துள்ளது. அற்புதமான அந்த ஹோமம் குறித்து அறிந்துகொள்வதற்கு முன்பாக அது நடைபெறும் காவடி பழநியாண்டவர் ஆசிரமக் கோயில் குறித்து அறிந்துகொள்வோம்.

சேலத்தில் குறைகள் தீர்க்கும் கோயிலாகவும் வியாதிகளைப் போக்கும் திருத்தலமாகவும் அமைந்துள்ளது முருகனின் ஒன்பதாம் படை வீடு என்று போற்றப்படும் ஸ்ரீகாவடி பழநியாண்டவர் ஆசிரம ஆலயம். இந்த ஆசிரம வளாகம் பல நூறு தெய்வங்களின் சந்நிதிகளைக் கொண்டுள்ளது.
குறிப்பாக இங்கு 108 வெவ்வேறு மகாலட்சுமியின் திருவடிவங்களைக் கொண்டு செல்வவளம் அருளும் திருத்தலமாகவும் இருந்து வருகிறது.
சகல தெய்வங்களின் அருள் மட்டுமின்றி எண்ணற்ற சித்தர்கள்; யோகிகள் அருள் சாந்நித்யமும் பெற்று விளங்குகிறது இந்த ஆலயம். அருள்மிகு செங்கோட சித்தர், சித்தர் பாவாயம்மாள் ஆகியோர் ஆசியால் தொடங்கப்பட்ட இந்த ஆஸ்ரமம், சகல தெய்வ சந்நிதிகளையும் கொண்டு, நாள்தோறும் சிறப்பு ஆராதனைகளும் ஹோம வைபவங்களும் நடைபெற சிறப்புடன் விளங்கி வருகின்றது.
ஶ்ரீசுயம்வர ஹோமத்தில் கலந்துகொள்ள முன்பதிவுக்கு இங்கே கிளிக் செய்யவும்!