பாமக பொதுக்குழு கூட்டம் நேற்று விக்ரவாண்டியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “இப்போது தான் நம்மைப் பற்றி எல்லோரும் கொஞ்சம் நன்றாக பேசுகிறார்கள். இல்லையென்றால் அய்யோ இவர்களா? சாதி கட்சி என்று ஒரே வார்த்தையில் சொல்லி முடித்துவிடுவார்கள்.
சட்டமன்றத்தில் சௌமியா அன்புமணியும், நம் எம்எல்ஏ-க்களும் ஆக்கப்பூர்வமாக பேசும் கருத்துகள் இப்போது எல்லோருக்கும் சென்றடைகிறது. ஆனால் 30 வருடமாக நாம் பேசிய கருத்துகள் மக்களை சென்றடைய வில்லை. இருப்பினும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது.

இப்படி எல்லாம் ஸ்கோர் செய்கிறார்கள் என்று பொறாமைப்படுகிறார்கள். கடந்த வாரம் ஈரோட்டில் நடைபெற்ற ஒரு முக்கியத் திருமண நிகழ்வுக்கு நான் சென்றிருந்தேன்.
அப்போது அங்கு எனது பழைய பள்ளி நண்பர்களும், அவர்களது மனைவிகளும் திரண்டு வந்திருந்தார்கள்.