முதலமைச்சருக்குப் புரியவில்லை!
எனவே, அரசு இத்திட்டத்திற்கு மாற்றாக ECR பாதையில் உள்ள திருவிடந்தை அல்லது பனையூர், அக்கரை போன்ற சென்னைக்கு வெளியே உள்ள பகுதிகளைத் தேர்வு செய்யலாம்.
இத்திட்டம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என அனைவருக்கும் புரிகிறது. ஆனால் முதலமைச்சருக்குப் புரியவில்லை என்றால், அவருக்கு அரசியல் பார்வையோ நிர்வாகப் பார்வையோ உள்ளதா என்ற கேள்வி எழுகிறது.

அரசாணையை அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்
நொச்சிக்குப்பம் முதல் சீனிவாசபுரம் வரையிலான பகுதியை ‘மீன்பிடி பாதுகாப்பு மண்டலமாக’ அறிவிக்க வேண்டும் என்றும், புதிய தலைமைச் செயலகத்திற்கான அரசாணையை அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் கோருகிறோம்.
திரும்பப் பெறவில்லை என்றால், 56 மீனவ கிராமங்களை ஒன்றிணைத்து ஜல்லிக்கட்டு போராட்டத்தை விட மிகப்பெரிய அளவிலான வீரியமிக்க போராட்டத்தை முன்னெடுப்போம்” என்றார்.