இதுவரை ஒரு பக்கம் ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் போர் நடந்துகொண்டிருந்தது. இன்னொரு பக்கம், அமெரிக்காவிற்கும், ஈரானுக்கும் போர் நடந்துகொண்டிருந்தது.
இப்போது ரூட் மாறி உக்ரைனுக்கும், ஈரானுக்கும் இடையே மோதல் போக்கு தொடங்கியுள்ளது.
கடந்த 25-ம் தேதி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனது எக்ஸ் பக்கத்தில், “காஸ்பியன் கடலில் நடத்தப்பட்ட நீண்டதூரத் தாக்குதல்களில் மிகச் சிறந்த பலன்களை அடைந்திருக்கிறோம். அதில் ஈரானுடன் தொடர்புடைய ராணுவச் சரக்குப் போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்பட்ட கப்பல்களும், ஒரு போர்க்கப்பலும் தாக்கப்பட்டிருக்கிறது” என்று பதிவிட்டிருந்தார்.

இந்தக் கப்பல்கள் மூலம் ஈரான் ரஷ்யாவிற்கு உதவ டிரோன்கள், ஏவுகணைகளை அனுப்பியது என்று உக்ரைன் குற்றம் சாட்டியது. ஆனால், ஈரானோ, “உக்ரைன் தாக்கிய கப்பல் வர்த்தகக் கப்பல்’ என்று குற்றச்சாட்டை மறுக்கிறது.
மேலும், ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, “இஸ்ரேலின் தூண்டுதலின் பேரில் ஐரோப்பாவைத் தன் போருக்குள் இழுப்பதற்காக, ஜெலன்ஸ்கி ஈரானிய வணிகக் கப்பல் மீது தாக்குதல் நடத்தி, ஒரு மாலுமியைக் கொன்றுள்ளார். இது ஐ.நா சாசனத்தை வெளிப்படையாக மீறும் செயலாகும்.