“மேல்படுகை மாநிலமான கர்நாடகா, காவிரி ஆற்றின் குறுக்கே எந்தவிதமான கட்டுமானத்தையும் மேற்கொள்வதற்கு, கீழ்ப்படுகை மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று காவிரி நீர் விவகாரம் தொடர்பாக 2018 பிப்ரவரியில் வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்து மத்திய அரசு அறிந்துள்ளதா?
உத்தேசிக்கப்பட்டுள்ள மேகதாது திட்டத்திற்குக் கீழ் படுகை மாநிலங்களின் ஒப்புதலைக் கர்நாடகா பெற்றுள்ளதா;
ஆம் எனில், அதுகுறித்த விவரங்கள் என்ன; மற்றும்
மத்திய அரசின் பரிசீலனையில் உள்ள இந்த மாநில முன்மொழிவின் தற்போதைய நிலை என்ன?”
இது நேற்று நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் எழுப்பிய கேள்வி.
இதற்கு மத்திய ஜல்சக்தி துறை இணை அமைச்சர் ராஜ் பூஷன் சௌத்ரி அளித்துள்ள பதில்தான், தமிழ்நாட்டில் தற்போது எதிர்ப்புகளையும், கண்டனங்களையும் கிளப்பியுள்ளது.

“காவிரி நீர் விவகாரம் தொடர்பாக 16.02.2018 நாளிட்ட மாண்புமிகு உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, காவிரி ஆற்றின் குறுக்கே எந்தவிதமான கட்டுமானத்தையும் மேற்கொள்வதற்கு, தமிழ்நாட்டைக் கடந்து செல்லும் ஏனைய பிற மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒப்புதலைக் கர்நாடக மாநிலம் பெற வேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை.