இனிமேலும் இந்த விதிமீறல் தொடர்ந்தால், பணியிடை நீக்கத்தைத் தாண்டி பணிநீக்கம் செய்யப்படுவார்கள். இதற்கு கடை ஊழியர்கள் மட்டுமன்றி மாவட்ட மேலாளர்களும் பொறுப்பேற்க வேண்டும்.
இந்த ஊதிய உயர்வால் மதுபானங்களின் விலை உயர்த்தப்படாது. 21 வயதுக்கு உட்பட்டவர்களை பப்கள் (Pubs) மற்றும் எஃப்.எல்.3 (FL3) உரிமம் பெற்ற மனமகிழ் மன்றங்களுக்குள் அனுமதித்தால், அந்த நிறுவனங்களின் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும்.” எனத் தெரிவித்திருக்கிறார்.