டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதல் வசூல்! – 20 நாட்களில் 200 பணியாளர்கள் சஸ்பெண்ட்

Spread the love

டாஸ்மாக் கடைகளில் மதுபான பாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட ரூ.10 கூடுதலாக வசூலிக்கும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது.

மதுபான பாட்டில்களுக்கு கூடுதல் தொகை வசூலிக்கக் கூடாது என்று ஏற்கனவே டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை மீறி செயல்படும் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், கடந்த 20 நாட்களில் மட்டும் 200 பணியாளர்கள் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

டாஸ்மாக் கடை

மேலும், மதுபான பாட்டில்களுக்கு கூடுதல் தொகை வசூலிப்பது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் மீண்டும் எச்சரித்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *