International
oi-Halley Karthik
ரோம்: பிரான்சில் நபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில், தன்னுடன் சேர்ந்து போட்டோ எடுத்துக்கொள்ள இத்தாலி பிரதமர் மெலோனி கெஞ்சினார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். இத்தாலி எவ்வளவு பவர்புல் நாடு, அந்நாட்டின் பிரதமர் போய் இப்படி கெஞ்சலாமா? என்று சோஷியல் மீடியாக்களில் பேச்சுகள் எழுந்த நிலையில், நான் யாரிடமும் கெஞ்சவில்லை என்று மெலோனி டிரம்புக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.
ஜி7 உச்சி மாநாட்டில் டிரம்ப் உட்பட பல்வேறு உலக தலைவர்கள் பங்கேற்றிருந்தனர். இந்த மாநாட்டில் டிரம்புடன் மெலோனி சேர்ந்து இருப்பதை போன்ற போட்டோ ஒன்று சோஷியல் மீடியாவில் பரவலாக ஷேராகியிருந்தது. அதில், மெலோனி டிரம்பிடம் ஏதோ சொல்ல வருவதை போல பணிவுடன் இருந்தார்.

இது குறித்து இத்தாலியின் La7 TV செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த டிரம்ப், “மெலோனி என்னிடம் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கெஞ்சினார். அவருக்கு என்னுடன் புகைப்படம் எடுக்க அவ்வளவு ஆசை.
ஆனால், எனக்கு அதில் பெரிய விருப்பம் இல்லை. இருப்பினும், அவர் மீது பரிதாபப்பட்டுதான் நான் புகைப்படம் எடுத்துக்கொண்டேன். அவர் என்னிடம் பேசியதே.. அவருக்கு பெருமைதான். நான் அவரிடம் பேச வேண்டிய கட்டாயம் எனக்கு இல்லை” என்று பண்ணையார் போல பேசியிருந்தார்.
இந்த நக்கல் பேச்சுதான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இது மெலோனிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இத்தாலியோட பவர் என்ன.. நம்ம பிரதமர் போய் டிரம்பிடம் ஒரு போட்டோவுக்கு கெஞ்சியிருக்கிறாரே! என்று பலரும் விமர்சனங்களை அடுக்கினர். போதாத குறைக்கு இத்தாலி எதிர்க்கட்சிகளும் மெலோனிக்கு எதிராக களத்தில் இறங்கின.
இந்த விஷயம் இப்படியே போனா சரிப்பட்டு வராது என்று உணர்ந்த, மெலோனி, இன்ஸ்டாவில் இது குறித்து விளக்கமளித்திருக்கிறார். அதில், “டிரம்பின் இந்த பேச்சு எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. மேற்கத்திய நாடுகளின் உண்மையான நட்பு நாடுகளிடம் ஏன் அவர் இப்படி நடந்துக்கொள்கிறார் என்று தெரியவில்லை.
பரம்பரை எதிரி நாடுகளிடம் டிரம்ப் காட்டும் பணிவும், இணக்கமான போக்கையும், ஏன் நட்பு நாடுகளிடம் காட்டவில்லை? எது எப்படியோ.. ஒன்று மட்டும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.. நானோ, என்னுடைய நாடோ யாரிடமும் கெஞ்சியது கிடையாது” என்று கூறியிருக்கிறார்.