'வெல்லும் வரை ஒன்றிணைந்து போராடுவோம்' – ஸ்டாலின் சொன்ன பிறந்த நாள் வாழ்த்திற்கு ராகுல் காந்தி பதில்

Spread the love

இன்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பிறந்த நாள்.

இந்திய பிரதமர் மோடி தொடங்கி பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆனாலும், ஒரு வாழ்த்து கொஞ்சம் முக்கியத்துவம் பெறுகிறது.

அது தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலினின் வாழ்த்து. அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “மதிப்பிற்குரிய எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

நீங்கள் என்றும் நல்ல உடல்நலத்தோடும் மகிழ்ச்சியோடும் வாழ வாழ்த்துகிறேன்” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, காங்கிரஸிற்கும், திமுகவிற்கும் முட்டலும், மோதலுமாக இருக்கிறது. கடந்த வாரம் நடந்த இந்தியா கூட்டணி கூட்டத்தில் கூட திமுக கலந்துகொள்ளவில்லை.

இந்த நிலையில் தான், ஸ்டாலின் வாழ்த்து முக்கியத்துவம் பெறுகிறது.

ஸ்டாலின், ராகுல் பதிவுகள்
ஸ்டாலின், ராகுல் பதிவுகள்

ஸ்டாலினின் வாழ்த்திற்கு ராகுல் காந்தியின் நன்றி இன்னும் கொஞ்சம் ஹைலைட்டாக உள்ளது…

“தங்களின் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி, திரு. மு.க. ஸ்டாலின் அவர்களே!

இந்தியாவின் ஆன்மா, நமது அரசியலமைப்புச் சட்டம் மற்றும் கூட்டாட்சித் தத்துவத்தைப் பாதுகாப்பதற்கான நமது கூட்டு உறுதிப்பாடு தொடர்ந்து நம்மை வழிநடத்தும். இது நமது ஜனநாயகத்தின் ஆன்மாவிற்கான போராட்டம், இதில் நாம் வெல்லும் வரை ஒன்றிணைந்து போராடுவோம்” என்று நன்றி தெரிவித்துள்ளார் ராகுல் காந்தி.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *