டெல்லியில் உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்து; 20 பேர் உயிரிழப்பு!| 20 Killed In Massive Fire At Delhi Restaurant

Spread the love

டெல்லி மாளவியா நகரில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் தற்போது வரை 20 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

டெல்லி மாளவியா நகரில் உள்ள உணவு விடுதி ஒன்றில் இன்று (ஜூன் 3) காலை 9.40 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது.

டெல்லி தீயணைப்புத் துறையினர் தகவல் அறிந்து சம்பவ பகுதிக்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

தீ பற்றிய உணவகம்

தீ பற்றிய உணவகம்

இதில், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.

தீ விபத்தில் சிக்கி 20 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில் தற்போது பலி எண்ணிக்கை உயர்ந்திருக்கும் எனக் கூறப்படுகிறது.

தீயை அணைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

காவல்துறையின் சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்று விசாராணை மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *