உலக நன்மையைக் கருத்தில் கொண்டு, பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இம்மாநாட்டில் நேர்மறையான மற்றும் அர்த்தமுள்ள விவாதங்கள் நடைபெறும் என்ற முழு நம்பிக்கை உள்ளது.
சான்றோர்களுடனேயே பழக வேண்டும். சான்றோர்களுடனேயே கூடி வாழ வேண்டும்.
சான்றோர்களுடனேயே உரையாடல்களையும் நட்பையும் பேண வேண்டும். தீயோருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது” என்று பதிவிட்டுள்ளார்.
இன்று புதினும், மசூத் பெஜெஷ்கியானும் மோடியைத் தனித்தனியாகச் சந்திக்க உள்ளனர். இப்போது உலக நாடுகளுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சினைகளில் இரண்டு – ஒன்று ஈரான் போர், இன்னொன்று, ரஷ்ய போர். இது குறித்து முக்கியமாக மோடி உடனான சந்திப்பில் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜி ஜின்பிங்கும் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இன்னும் பல சந்திப்புகள் நடக்க உள்ளன.
இப்போது பிரிக்ஸ் மாநாட்டையொட்டி டெல்லி தீவிரக் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கிறது.