“டைம் பாஸ் ஆக்டிவிட்டி; துப்பில்லாத ஆட்சி’’ – முதல்வர் விஜய் மீது கொந்தளித்த எம்.பி கதிர் ஆனந்த் | dmk mp kathir anand severely criticized cm vijay

Spread the love

கேள்விகளுக்குப் பதில் இல்லை. பதிலை மறைப்பதற்காக நாடகத்தை அரங்கேற்றி, சட்டசபையை நாடக கொட்டகையாக மாற்றியுள்ளார்கள். இதுதான் இன்று ஜனநாயகம் படும்பாடு. தி.மு.க ஆட்சி இருக்கும்போது, எந்த விவசாயியிமே சாலையில் இறங்கிப் போராட்டம் செய்யவில்லை. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுத்தவர் கலைஞர். இந்தியாவிலேயே அது ஒரு வரலாற்றுத் திட்டம்.

`நான் அடுத்த ஜென்மத்தில் விவசாயியாக பிறக்க விரும்புகிறேன்’ என்று முதலமைச்சர் விஜய் பேசிய பேச்சையெல்லாம் நாம் கேட்டோம். ஆனால், விவசாயிகள் சாலையில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை ஜெயிலில் அடைப்பதுபோல அடைத்து வைத்திருக்கிறார்கள். விவசாயிகளை அழைத்து அவர்களின் குறைகளை கேட்டு, அவர்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்கக்கூட துப்பில்லாத ஆட்சிதான் நடக்கிறது.

முதல்வர் விஜய்

முதல்வர் விஜய்

இந்த மாதிரி ஆயிரக்கணக்கான கணைகளை தொடுக்க முடியும். நாங்களும் நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், இந்த அரசு தி.மு.க-வை தரக்குறைவாக பேசியும், உண்மைக்குப் புறம்பாகவும் சித்தரித்துக்கொண்டிருக்கிறார்கள். கண்டிப்பாக, மக்கள் மத்தியில் இந்த நியாயத்தை கொண்டுச் செல்வோம். மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு இந்த அரசாங்கம் ஒருநாள் பதில் சொல்லியே தீர வேண்டும்.

இன்றைக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் வ.உ.சி மைதானத்தில் நலத் திட்டங்களை கொடுத்துள்ளார். நலத்திட்டங்களை கொடுக்கும்போது, மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி, மேயர், கவுன்சிலர்கள் இருக்கிறோம். எங்கள் யாரையும் அழைக்கவே இல்லை. `கலெக்டரின் விருப்ப நிதியில் இருந்து நிகழ்ச்சியை நடத்துவதால், யாரையும் அழைக்க வேண்டாம்’ என்று கலெக்டர் சொன்னாராம். கலெக்டரின் விருப்ப நிதியாக இருந்தாலும்கூட இது மக்களின் வரிப்பணம். ஆகையால், மக்கள் பிரதிநிதிகளை வைத்துக்கொண்டுதான் நலத்திட்டங்களை கொடுக்க வேண்டும் என்பது தான் வரலாறு. அரசியல் பண்பு. இதைக்கூட த.வெ.க அரசாங்கம் கடைப்பிடிக்கவில்லை’’ என்றார் கொந்தளிப்போடு.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *