“தங்கம், வெள்ளி விலை எப்போது ஏறும் என்பதை இப்போதைய சூழலில் கணிக்க முடியாது.
ஈரான் போர் முடிய வேண்டும். பணவீக்கத்தின் தாக்கம் நமக்கு தெரிய வர வேண்டும்.
போர் தொடர்ந்தால் எனர்ஜி, கேஸ், உரம் ஆகியவற்றின் தட்டுப்பாடு வரலாம். இதனால், உணவு தட்டுப்பாடுக் கூட ஏற்படலாம்.

இந்தச் சூழலில், தங்கம், வெள்ளியை விட, உணவுதான் முக்கியம். உலக நாடுகள் அனைத்துமே உணவை நோக்கி நகரத் தொடங்கும். இதனால், உடனடியாக தங்கம், வெள்ளி விலையில் ஏற்றம் ஏற்படாது.
போர் உடனடியாக முடிந்தாலும், கச்சா எண்ணெய், எனர்ஜி சப்ளை, உரம் உற்பத்தி போன்றவை சீராகக் குறைந்தபட்சம் ஆறு மாதங்களாவது ஆகும்.
அதன் பிறகுதான், தங்கம், வெள்ளி விலை ஏற்றம் காணும்”.