தஞ்சாவூரில், கடந்த 10-ம் தேதி, மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம்(45) தலைமையிலான போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அம்மாபேட்டையைச் சேர்ந்த ஆறுமுகம்(45), முருகன்(48) ஆகிய இருவரும் தடைசெய்யப்பட்ட 83 கிலோ குட்காவை தஞ்சாவூருக்கு விற்பனைக்காக கடத்தி வந்த போது போலீஸில் பிடிப்பட்டனர்.
இந்நிலையில், மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், ஏட்டு கவுதமன்(35) மற்றும் போலீஸ் அழகர்கசாமி (37) ஆகிய மூவரும், குட்காவை பறிமுதல் செய்ததுடன் ஆறுமுகம் மற்றும் முருகனை போலீஸ் ஸ்டேஷனுக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் சண்முகம், அவர்களிடம் விசாரணை செய்து வழக்கு பதிந்து கைது நடவடிக்கை எடுக்காமல், பறிமுதல் செய்த குட்கா பொருட்களை மீண்டும் அவர்களிடம் கொடுத்து அனுப்பி வைத்தார். இது குறித்து தகவலறிந்த நிலையில் எஸ்.பி சுந்தரவதனம் விசாரணை மேற்கொண்டார்.