அந்த விழா மேடையில், “தெலங்கானா ராஷ்டிர சேனா ஒரு ஆழமான நோக்கத்துடன் வந்துள்ளது . நல்லாட்சியின் மூலமாகவும், மக்கள் இயக்கங்களை அரசியலமைப்பு, அரசியல் அதிகாரத்துடன் இணைப்பதன் மூலமாகவும் ஒரு பெரும் மாற்றத்தைக் கொண்டுவரவே நாங்கள் இங்கு வந்துள்ளோம். அப்போதுதான் சமூக நீதியையும், நாம் அனைவரும் கனவு கண்ட தெலங்கானாவையும் அடைய முடியும்.” என உரையாற்றி, கே.சி.ஆர் ஆட்சியை மறைமுகமாக விமர்சித்திருக்கிறார்.
கவிதா தனது புதிய கட்சிக்கு ‘தெலங்கானா ராஷ்டிர சேனா’ என்று பெயரிட்டிருப்பது வெறும் தற்செயலான தேர்வு அல்ல. அது ஒரு நுட்பமான அரசியல் உத்தி. கே.சி.ஆர்-ன் பி.ஆர்.எஸ் கட்சியின் பழைய பெயரான டி.ஆர்.எஸ்-ஐ கவிதா கையில் எடுத்துக்கொள்வதன் மூலம், ‘தெலங்கானா இயக்கத்தின் உண்மையான வாரிசு நான்தான்’ என்ற செய்தியை நேரடியாக வாக்காளர்களிடம் கொண்டு சேர்க்கிறார்.

தெலங்கானா போராட்டத்தின் உணர்வோடு இன்னும் அடையாளப்படுத்திக்கொள்ளும் பழைய தலைமுறை வாக்காளர்களுக்கு, ‘டி.ஆர்.எஸ்’ என்ற வார்த்தை மட்டுமே ஒரு உணர்வுபூர்வமான நெருக்கத்தை உருவாக்கும். குறிப்பாக, பி.ஆர்.எஸ் என்ற பெயர் மாற்றத்தை ஒரு தவறான முடிவாகப் பார்த்த தெலங்கானா அடையாள உணர்வாளர்களை நேரடியாக கவிதா குறிவைக்கிறார்.