தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் போட்ட கணவர்; விபரீத முடிவெடுத்த மனைவி – திருவாரூரில் அதிர்ச்சி

Spread the love

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கரும்பியூர் பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் (31) இவரது மனைவி காயத்ரி(24). இவர்களுக்கு நான்கரை வயதில் ஒரு ஆண் குழந்தை, இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளனர்.

பிரவீன் நாகை மாவட்டத்தில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

சிகிச்சையில் கணவர்

இதனால் பிரவீன் மன உளைச்சலுக்கு ஆளானதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் மனைவி மீது கோபமாக வெளியே சென்ற பிரவீன் எலி மருந்து வாங்கியுள்ளார். பின்னர், மேட்டுப்பாளையம் பகுதியில் மைலி அம்மன் கோவில் அருகே எலி மருந்தை தின்றுள்ளார். இதையடுத்து மொபைல் ஆப் மூலம் தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ரெடி செய்து வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இதை தன்னுடைய வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸாகவும் வைத்துள்ளார்.

இதைபார்த்த அவரது மனைவி காயத்ரி அதிர்ச்சியடைந்து தனது கணவர் இறந்து விட்டதாக நினைத்து விட்டார். பின்னர் கணவர் இறப்பை தாங்க முடியாமல் வீட்டில் தூக்கு போட்ட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் எலி பேஸ்டை தின்றதால் மயக்கம் போட்டு கிடந்த பிரவீனை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்கொலை தடுப்பு மையம்

மனைவி தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்ட தகவல் பிரவீனுக்கு தெரிந்து விட்ட நிலையில் அவர் கதறி அழுதிருக்கிறார். கணவர் இறந்து விட்டதாக நினைத்து மனைவி விபரீத முடிவை எடுத்து விட்டார். ஒருவருக்கொருவர், கருத்து வேறுபாடு இருந்தாலும், பெரும் அன்பு வைத்திருப்பதை இவை காட்டுகிறது. ஆனால் விட்டு கொடுத்து செல்லாத்தால் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது என்கிறார்கள்.

அம்மா இல்லாமல் அந்த பிள்ளைகளின் எதிர்காலம் கேள்வி குறியாக அமைந்து விடும் என்பது தான் கவலைக்குறியது. இந்த விவகாரம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *