`தமிழகத்தில் 75 நாள்களில் 8 ஆணவ மரணங்கள்’- எவிடென்ஸ் அமைப்பு அதிர்ச்சி தகவல்!

Spread the love

இந்த வழக்கில் சட்டவிரோதமாக சடலத்தை தகனம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதோடு, அலட்சியமாக செயல்பட்ட காவல்துறையினரை பணியிடை நீக்கம் செய்து, இந்த வழக்கையும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும்.

தமிழகத்தில் சாதியின் பெயரில் நடைபெறும் ஆணவக் கொலைகளைத் தடுக்க நீதியரசர் கே.என். பாஷா ஆணையத்திடம் வழங்கப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் ஆணவப் படுகொலைகளை தடுக்க தனி சட்டம் கொண்டு வர வேண்டும்.

ஆணவக் கொலை

ஆணவக் கொலை

பதின்பருவ காதல் தொடர்பான பிரச்னைகளால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க வட்டார அளவில் ஆலோசனை மற்றும் கவுன்சிலிங் மையங்களை உருவாக்க வேண்டும்.

மயிலாடுதுறை மற்றும் ஊரணிபுரம் ஆகிய இரு சம்பவங்களிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான நீதி கிடைக்க, வழக்குகளை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உண்மையை வெளிக்கொணர வேண்டும். தமிழகத்தில் 75 நாள்களில் 8 ஆணவ மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. தொடர்ந்து நடைபெற்று வரும் ஆணவ மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அரசு உடனடி மற்றும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *