நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட 9 இடங்களிலும் வெற்றி பெற்றது. ஆனால், சட்டமன்றத் தேர்தலில் 5 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.
தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி, த.வெ.க-வுடன் பேச்சுவார்த்தை நடத்தி, நிபந்தனையுடன் ஆதரவளித்தது. பிறகு, காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களான ராஜேஷ்குமாரும் விஸ்வநாதனும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.

தேர்தலுக்கு முன்பிருந்தே, தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவார் எனப் பேசப்பட்டு வந்தது. கூடிய விரைவில் புதிய தலைவர் பற்றிய அறிவிப்பு வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், அதுகுறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. மாணிக்கம் தாகூர் புதிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.