தமிழ்நாட்டின் பாதை சமூக நீதிப் பாதை, சமத்துவ பாதை. அதை சீரழிக்க பா.ஜ.க முயற்சிக்கிறது. தமிழ்நாடு தான் சமூக நீதி, மகளிர் வளர்ச்சி ஆகியவற்றிற்கு முன்னுதாரணமாக மற்ற மாநிலங்களுக்கு திகழ்கிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் கட்டுப்பாட்டில் பிரதமர் மோடி உள்ளார். அவர் கூறுவதை அப்படியே செய்ய பிரதமர் மோடி செய்கிறார். அவர் குதி என்று சொன்னாலும் பிரதமர் குதிப்பார். இப்போது மோடி அமெரிக்காவின் பிரதிநிதியாக இந்தியாவில் உள்ளார். நமது நாட்டின் விவசாயிகளை, தொழிலாளர்களை தரவுகளை சிறு குறு தொழில்களை அமெரிக்காவிற்கு விற்று விட்டார் பிரதமர் மோடி. எஃப்ஸிடின் மூலம் பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் டிரம்ப் பணிய வைத்துள்ளார். தான் ட்ரம்பிற்கு பணிந்து இருப்பது போலவே தனக்கு தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி பணிந்து இருக்க வைத்துள்ளார். இப்போது நான் கூறுகிறேன் தமிழ்நாட்டிற்குள் பா.ஜ.க-வாலும், ஆர்.எஸ்.எஸ்ஸாலும் நுழைய முடியாது.
தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அதை அனுமதிக்காது. தமிழ்நாட்டிற்கும், எனக்கும் இருக்கும் பந்தம் மக்களாகிய உங்களுக்கு தெரியும். எனது தாத்தா, தந்தை, தாயார் தொட்டு இன்று நான் தமிழக மக்களுடன் நிற்கிறேன். தமிழக மக்களுக்கும் எனக்கும் உள்ள பந்தம் பாசம் அரசியலுக்கு அப்பாற்பட்டவை. தமிழ்நாட்டு மக்களின் டெல்லி பிரதிநிதியாக நான் என்றும் இருப்பேன். குறிப்பாக சொன்னால் தமிழ்நாட்டு மக்களின் சிப்பாயாக டெல்லியில் நான் இருப்பேன். தமிழ்நாடு மக்கள் தேவைகளை பூர்த்தி செய்யவும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் நான் போராடுவேன். தமிழ்நாடு மக்களை பார்க்க எனக்கு பெருமையாக உள்ளது. இந்த தேர்தலில் ஆர்.எஸ்.எஸை, பா.ஜ.க-வை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அகற்றும். மக்களாகிய நீங்களும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களைப் போல் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் சிறப்பான உழைப்பை நாம் கொடுக்க வேண்டும்” என்றார்.
நிகழ்ச்சியின் முடிவில் ராகுல் காந்திக்கு அரிசி நினைவு பரிசாக வழங்கப்பட்டது. அப்போது, “அதை நான் நிச்சயம் சமைத்து சாப்பிடுவேன்” என ராகுல் காந்தி அறிவித்தார்.