தமிழ்நாடு அரசியல் களத்தில் புதிதாக இன்னொரு இயக்கம் கூடியிருக்கிறது.
பாஜகவில் இருந்து விலகி புதிய இயக்கத்தை அறிவித்துள்ளார் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை.
இந்த இயக்கத்தின் முதல் அரசியல் களம் – வருகிற உள்ளாட்சித் தேர்தல் என்றும் கூறியுள்ளார் அண்ணாமலை.
அண்ணாமலையின் புதிய இயக்கம் குறித்து துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தியிடம் கேட்கப்பட்டது.
“சினிமா துறையில் இருந்து வராத ஒரு பெரிய தலைவர் உருவாகி இருக்கிறார். தமிழ்நாட்டில் ஒரு மாற்றம் வரும்” என்று கூறியிருக்கிறார்.
நேற்று முன்தினம் (ஜூன் 5) தன்னுடைய அரசியல் இயக்கத்தில் சேர “We The Leaders’ அமைப்பில் சேருமாறு அழைப்பு விடுத்திருந்தார் அண்ணாமலை.
அவரது அழைப்பிற்கு முன், அந்த வலைதளத்தில் வெறும் 14,000 உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர்.
தற்போது அந்த வலைதளத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 15.50 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.