தமிழ் சினிமா வரலாற்றின் தொடக்கம் இயக்குநர் நடராஜ முதலியார். இன்று பெரிய ஆலமரமாகக் கிளைகளோடு படர்ந்து விரிந்திருக்கும் தமிழ் சினிமாவுக்கு முதல் விதை போட்டவர் நடராஜ முதலியார்தான்.
தமிழ் சினிமாவின் முதல் திரைப்படமான “கீசக வதம்’ படத்தை இயக்கிய நடராஜ முதலியார் மறைந்து இன்றோடு 55 ஆண்டுகள் ஆகின்றன.

இந்தத் திரைப்படத்தில் தொடங்கி, புராணக் கதைகளை வைத்துப் பல்வேறு சினிமாக்களையும் இவர் உருவாக்கியிருக்கிறார்.
நடராஜ முதலியார் பற்றியும், அவர் இயக்கிய சினிமாக்கள் பற்றியும் நேரடி கள ஆய்வுகளைச் செய்து, ஓர் ஆவணப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநரும் ஊடகவியலாளருமான என். முருகராஜன்.
நடராஜ முதலியாரின் 55-வது நினைவு நாளில், அவரைப் பற்றியும் முருகராஜனின் ஆய்வுகள் குறித்தும் விரிவாகப் பார்ப்போம்.