கம்யூனிஸ்ட் நிலைப்பாடு
ஆரம்பத்திலிருந்தே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ‘ஆட்சி அமைக்க மட்டுமே ஆதரவு, கூட்டணி இல்லை’ என்பதில் தெளிவாக உள்ளது.
இதையொட்டி, இந்த இரு கட்சிகளும் இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
இதனால், இந்த இரு கட்சிகளைத் தவிர்த்து, அழைப்பு விடுக்கப்பட்ட மற்ற அனைத்துக் கட்சிகளும் கலந்துகொண்டன.

புதிய பெயர்
தவெக, காங்கிரஸ், விசிக, முஸ்லீம் லீக், மதிமுக ஆகிய கட்சிகளின் கூட்டணிக்கு இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில், ‘மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
தவெக தவிர்த்து, முன்பு திமுகவில் இந்தக் கட்சிகள் கூட்டணியில் இருந்தபோது, அந்தக் கூட்டணிக்கு ‘மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி’ என்று பெயர் இருந்தது குறிப்பிடத்தக்கது.