‘திமுக ஆட்சியில் பங்கு தமிழகம் ஏற்காது என்று வெளிப்படையாக அறிவித்தது, ஆனால்.!’- எம்.பி மாணிக்கம் தாகூர்| M.P Manickam Tagore speaks about giving cabinet berth to the Congress

Spread the love

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சியை வீழ்த்தி, 108 இடங்கள் வென்று விஜய்யின் தவெக, பல்வேறு கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்திருக்கிறது.

ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்ற சூழலில், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் திமுக கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது தவெக.

தவெக கூட்டணியில் முதல் கட்சியாக காங்கிரஸ் இணைந்தது. காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டு 5 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் தவெகவுக்கு ஆதரவளித்தது.

தவெக - காங்கிரஸ் நிர்வாகிகள்

தவெக – காங்கிரஸ் நிர்வாகிகள்

அடுத்து வரும் உள்ளாட்சி தொடங்கி மக்களவைத் தேர்தல் வரை தவெக உடனான கூட்டணி தொடரும் என்றும் காங்கிரஸ் அறிவித்திருந்தது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படும் என்று தவெக உறுதியளித்திருக்கிறது.

இதனை காங்கிரஸ் தேர்தல் மேலிட பொறுப்பாளர் கிரிஷ்சோடங்கர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *