இவ்வகை ஜெல்லி மீன்கள், பார்ப்பதற்கு வழுவழுப்பான நுங்கு வடிவிலோ, கண்ணாடி நூலிழையைப் போலவோ, பாலீத்தின் தாளைப் போலவோ இருப்பதால் அதனைப் பஞ்சு எனவும், ஒருவகை கடல்பாசி எனவும் நினைத்து பக்தர்கள் அதிலும் குறிப்பாக சிறுவர், சிறுமியர் தெரியாமல் அதனைத் தொட்டு விடுகின்றனர். இன்று கடலில் நீராடிக்கொண்டிருந்த 10-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு உடலில் அரிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலோர பாதுகாப்பு பணியாளர்கள் கடலில் மிதந்து வந்த ஜெல்லி மீன்களை சேகரித்து, பக்தர்கள் குளிக்காத ஆழமான கடல் பகுதிகளில் கொண்டு சென்று விட்டனர். மேலும், கடலில் நீராடும் பக்தர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எனவும், ஜெல்லி மீன்கள் தென்பட்டால் உடனடியாக கரைக்கு வந்துவிட வேண்டும், எக்காரணம் கொண்டும் கையால் தொடக்கூடாது எனவும் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.