நிதி அயோக் கூட்டத்தை புறக்கணித்த முதல்வர் ரங்கசாமி! – `மக்களுக்கான துரோகம்’ எனச் சாடும் நாராயணசாமி

Spread the love

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. ஆனால் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்திருக்கிறார் முதல்வர் ரங்கசாமி. இந்த நிலையில் புதுச்சேரியின் முன்னாள் முதல்வர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களுக்கு அனுப்பிய வீடியோ பதிவில், “பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் நடக்கிறது. அந்தக் கூட்டத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதலமைச்சர்களும் பங்கேற்று, தங்கள் மாநிலத்துக்கு தேவையான வளர்ச்சித் திட்டங்கள், நிதி போன்றவை குறித்து தங்கள் கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.

மிக முக்கியமான இந்த கூட்டத்தில் புதுச்சேரிக்கு தேவையான மாநில அந்தஸ்து, நிதி கமிஷனில் புதுவையை இணைப்பது, மாநிலத்தின் கடன்களை தள்ளுபடி செய்வது, சிறப்பு நிதி வழங்குவது போன்ற கோரிக்கைகளை முதலமைச்சர் ரங்கசாமி வைத்திருக்க வேண்டும். ஆனால் இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் ரங்கசாமி பங்கேற்கவில்லை. இதற்கு அரசியல் காரணங்கள் இருக்கலாம். என்.ஆர்.காங்கிரஸுக்கும், பா.ஜ.க-வுக்கும் இடையே நிலவும் விரிசலால் முதல்வர் ரங்கசாமி டெல்லிக்கு செல்லவில்லையா? பிரதமர் தலைமையிலான கூட்டத்தை புறக்கணிக்க முதல்வர் ரங்கசாமி முடிவு செய்துள்ளாரா என தெரியவில்லை. ஆனால் மாநிலத்தின் வளர்ச்சிக்காகப் பேச வேண்டிய சிறந்த வாய்ப்பை முதல்வர் ரங்கசாமி இழந்துவிட்டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *