திருமணத் தடை நீக்கும் அற்புதமான சுயம்வர பார்வதி ஹோமம்… நாளை சேலம் காவடி பழநி ஆண்டவர் சந்நிதியில்! | Powerful Swayamvara Parvathi Homam to Remove Marriage Obstacles at Salem Kavadi Palani Andavar Temple

Spread the love

வாழ்க்கை அர்த்தப்படவும், வாழையடி வாழையாக வாரிசுகள் தொடர்ந்து வளரவும் திருமணம் ஒவ்வொருவருக்கும் அவசியமாகிறது. அழகு, திறமை, அந்தஸ்து, ஐஸ்வர்யம் எல்லாம் இருந்தும் சிலருக்குத் திருமணப் பாக்கியம் கிடைக்காமல், ஏதேதோ காரணங்களால் தடைப்படுகிறது.

ஜாதகக் கோளாறு, பித்ரு தோஷங்கள், முன்வினைகள் என எத்தனையோ காரணங்களால் திருமணம் நடைபெறாமல் இருக்கும் வரன்களுக்கு நமது ஆன்மிகம் உதவி செய்கிறது.

ஆம்! திருமண வரம் அருளும் திருத்தலங்களில் நிகழும் சுயம்வர பார்வதி ஹோம வைபவங்களிலும் வழிபாடுகளிலும் கலந்துகொண்டால், உடனடியாக நல்ல வரன் கிடைக்கும் என்பது புராண காலம்தொட்டு இருந்து வரும் நம்பிக்கை.

சுயம்வர பார்வதி ஹோமம்

சுயம்வர பார்வதி ஹோமம்

பார்வதிதேவி, ஹிமவான் மகளாக அவதரித்த வேளையில் மீண்டும் ஈசனை மணக்க ரிஷிகளிடம் வழிகாட்டுதல் கேட்டார். அவர்கள் இந்த சுயம்வர பார்வதி ஹோமத்தைப் பற்றிக் கூறினர். அதற்கான மந்திரங்கள் நாரதரால் உபதேசிக்கப்பட்டது. தேவியனவள் இந்த ஹோம வழிபாடு செய்து, அதன் பலனாக ஈசனை மணம் செய்து கொண்டாள் என்கிறது புராணம்.

சுயம்வர பார்வதி ஹோமத்தில் கலந்து கொண்டால் ஜாதக, பித்ரு, சர்ப்ப, ருது, நவகிரஹ, களஸ்திர, மாங்கல்ய தோஷங்கள் நீங்கி விரைவில் திருமணம் கைகூடும் என்கிறார்கள். எல்லா வசதிகளும் இருந்தும் ஏனோ காரணத்தால் திருமணம் தடைப்பட்டுக் கொண்டே இருக்கும் அன்பர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. ஒருவருக்குத் திருமணம் தடைபடுகிறது என்றால், பெரும்பாலும் ஜோதிட அமைப்பும் பித்ரு தோஷமுமே காரணம் என்பார்கள். இந்த இரண்டு வகை தோஷங்களையும் நீக்கி அருள் செய்யும் வரமாக நடக்க இருக்கிறது இந்த சுயம்வர பார்வதி ஹோமம்.

ஶ்ரீசுயம்வர ஹோமத்தில் கலந்துகொள்ள முன்பதிவுக்கு இங்கே கிளிக் செய்யவும்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *