திருவாரூரில் இருந்து உலகப் பிரசித்தி பெற்ற திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் ஆலயத்திற்குச் செல்லும் நகரப் பேருந்தானது இன்று காலை வழக்கம்போல் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் பொங்கு சனீஸ்வரர் ஆலயத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது திருநெய்ப்பேர் என்ற இடத்தில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்தானது சாலையோரத்தில் இருந்த வாய்க்காலில் கவிழ்ந்தது.
பேருந்தில் உள்ள பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து பயணிகளைப் பத்திரமாக மீட்டெடுத்தனர்.





அதிலும் சிறுசிறு காயமடைந்த பத்திற்கும் மேற்பட்ட பயணிகளை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அனைவரும் அவசர சிகிச்சை பெற்று வீடு திரும்பும் நிலையில், பேருந்தில் பயணித்த 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டிக்கு தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் அவருக்கு மட்டும் உள்நோயாளி பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பேருந்து விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.