சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார், கார்த்தி மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கார்த்தி காவல் துறையினரிடம் இருந்து தப்பிப்பதற்காக ஒரு கட்டிடத்தில் இருந்து கீழே குதித்தாகக் கூறப்படுகிறது.
இதில் வலது கை மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக காவல் துறையினர் நடத்திய விசாரணையில், சிறுமியைக் கொலை செய்த கார்த்தி, அச்சிறுமியின் பக்கத்து வீட்டில் வசித்து வந்தவர் என்பதும், சாக்லேட் வாங்கி தந்து அழைத்து சென்று கொலை செய்தததும், இது தெரியாமல் இருக்க சிறுமியின் தந்தை உடன் சேர்ந்து தேடுவது போல நாடகமாடியதும் தெரியவந்தது.
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாரா என்பது உடற்கூராய்வு முடிவிலேயே தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு காவல் துறை தலைவர் சந்தீப் ராய் ராத்தோர், சிறுமியைக் கொலை செய்த தென்னந்தோப்பில் நேரில் ஆய்வு செய்தார். மேலும் சூலூர் காவல் நிலையத்தில் காவல் துறை உயரதிகாரிகளிடம் ஆய்வு கூட்டம் நடத்தினார்.
கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் நடைபெற்று வந்த சிறுமியின் உடற்கூராய்வு இன்று மதியம் நிறைவடைந்தது. கொலையாளிகளுக்குத் தண்டனை வழங்கும் வரை உடலை வாங்கமாட்டோம் எனச் சிறுமியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.