தி.நகர் நடைபாதை முதல் டிரில்லியன் இலக்கு வரை: ஒழுக்கமும் பொருளாதார வளர்ச்சியும் | My Vikatan author shares his success journey

Spread the love

Billion (1000000000):-

              உதாரணத்திற்கு தமிழ்நாட்டில் பல கோடி மகளிர் மாதந்தோறும் பெறும் மகளிர் உரிமைத் தொகை  திட்டம் குறித்து பேசலாம். இந்த திட்டத்துக்கு பலர் ஆதரவு தெரிவித்தாலும் சிலர் இத்திட்டத்தினை மறுக்கின்றனர். பணத்தை கொடுப்பதால் குறைந்து விடும் என்று பணத்தை பொருளாக பார்ப்பவர்கள்  கருதுகின்றனர். பணத்தை சரியாக  முறைபடுத்திப் பார்த்தால்  செல்வம் என்கிற மற்றொரு பெயர் புலப்படும். நமக்கு கிடைத்த செல்வத்தை சரியான முறையில் பயன்படுத்தினால் குறைந்து போகாது.

தற்போது மகளிர் உரிமைத் தொகையாக பெறப்படும் செல்வமானது அரசின் மூலம் நேரடியாக மக்களிடம் சென்று அவர்களின் அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்கிறது. இதன் மூலம் பணப்புழக்கம் அதிகரித்து மக்களின் சுமை சற்று குறைவதை காண முடிகிறது. இப்பணம் ஆயிரங்களில் மாத வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு மாத இறுதி நாட்களில் ஏற்படும் நெருக்கடியை சமாளிக்க பேருதவியாக இருப்பதை சாலையோர வியாபாரியாக உணர முடிகிறது. மாத இறுதி நாட்களிலும் மக்களின் வாங்கும் திறன் அதிகரித்துள்ளது. கோடிக்கணக்கான மக்களின் வரவு செலவு குறித்த அச்சம் சற்று நீங்கி விட்டது. வரவும் செலவும் போக சேமிப்பு மற்றும் முதலீடு நோக்கி மக்கள் நகரத் தொடங்கிவிட்டனர். 

Trillion (1,000,000,000,000):-

                                    இன்றைய அரசுகள் கல்வி, மருத்துவம், போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி  பொருளாதார ரீதியாக  மக்களின் சுமைகளை குறைக்கும் போது மேம்பட்ட நாட்டை உருவாக்க மக்களால் முழுவீச்சில் செயல்பட முடிகிறது. இன்றைய டிஜிட்டல் யுகத்தில் கடையின் முதலாளி முதல் முதல்வர் வரை மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தி நாட்டை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்வதை காண முடிகிறது.

எனவே நம் முதல்வர் அறிவித்த  1 டிரில்லியன் பொருளாதாரம் என்ற  வெற்றி இலக்கை தமதாக்கி நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்க வேண்டும். முன்பு என் கடையின் முதலாளி சொன்னது போல் ஜீரோ முதல் ஹீரோ  ஆவதற்கும் நம் முதல்வர் அறிவித்த நம் அனைவரின் இலக்கான 0 இலக்கத்தில் இருந்து 1,000,000,000,000 வரை செல்ல நமக்கு உதவக்கூடிய செல்வம்  தனி மனித ஒழுக்கமே ஆகும். பெரிதினும் பெரிது கேள் என்ற கூற்றின் படி முதல்வர் அறிவித்த இலக்கானது உத்வேகமுள்ள இளைஞர்கள் தவறான வழிகளில், வழி தவறிச் செல்லாமல் இலக்கை நோக்கிச் செல்ல வழிவகுக்கும். 

                                                                                           – சுபி தாஸ் 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *