Vijay: 'ஜோசப் விஜய் எனும் நானும்!' – அழைத்த ஆளுநர்; முதல்வராகும் விஜய்!

Spread the love

தவெக தலைவர் விஜய்யை ஆட்சியமைக்க அழைத்து ஆளுநர் அர்லேக்கர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

Vijay
Vijay

தவெக தலைவர் விஜய் ஏற்கனவே மூன்று முறை ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியிருந்தார். தவெகவுக்குப் பெரும்பான்மை இல்லாததாலும் டிடிவி தினகரன் கூறிய குதிரை பேர புகாரினாலும் ஆளுநர் விஜய்யைப் பதவியேற்க அழைக்கவே இல்லை.

இந்நிலையில், இன்று விசிக மற்றும் ஐ.யூ.எம்.எல் கட்சிகளின் ஆதரவையும் தவெக பெற்றது. இதைத்தொடர்ந்து ஆட்சிக்கு ஆதரவு அளித்த கட்சித் தலைவர்களோடு இணைந்து விஜய் இன்று மாலை 6:30 மணிக்கு ஆளுநரை நான்காவது முறையாகச் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பு 1 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. தவெகவுக்கு 120 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதால், ஆளுநர் அர்லேக்கர் உடனடியாக விஜய்யை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார். அதற்கான ஆணையையும் விஜய்யிடம் உடனே வழங்கினார்.

Vijay
Vijay

இதைத் தொடர்ந்து நாளை காலை 10 மணிக்கு நேரு ஸ்டேடியத்தில் விஜய் முதல்வராகப் பதவியேற்கவிருக்கிறார். அவருடன் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ் போன்றோரும் அமைச்சர்களாகப் பதவியேற்கவிருக்கின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *